20
திருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் மண்டல அளவிலான கலைநிகழ்ச்சி போட்டியில் பங்கேற்பு. ஜெ. ஜெ பொறியியல் கல்லுரியில் மண்டல அளவிலான கலைநிகழ்ச்சி போட்டி நடைபெற்றது. அதில் நேரு நினைவுக் கல்லூரி கல்லூரி மாணவ மாணவிகள் 14 பேர் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ஓவிய போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, நாட்டுப்புற நடனம், சிலம்பம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளை கல்லூரி தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் ஆகியோர் வாழ்த்தினர்.
செய்தி: இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
You must be logged in to post a comment.