Home அறிவிப்புகள் தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் – அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்..

தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் – அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தண்டவாள புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் 25 நாட்களுக்கு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கேத்தாண்டப்பட்டி முதல் வாணியம்பாடி வரையிலான தண்டவாள புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. மதியம் 12 மணிக்குத் தொடங்கிய பணிகள் மாலை 5 மணி வரையில் நடைபெற்றன. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து காக்கிநாடா செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், தர்பங்காவில் இருந்து மைசூரு செல்லும் பாங்மதி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் ரயில்களும் 3 மணி நேரம் தாமதாகப் புறப்பட்டன.

மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இன்னும் 25 நாட்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!