10
பெரியபட்டினம் மகான் செய்யதலி சந்தனக்கூடு ஆக., 18ல் கொடியேற்றம் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா 117ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக் கூடு 18.8.2018 (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
28.8.2018 (செவ்வாய் கிழமை) மாலை சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்குகிறது. 29.8.2018 (புதன் கிழமை) அதிகாலை தர்ஹா வந்தடைகிறது. 28.8. 18 மாலை சந்தனக் கூடு தொடக்கம் முதல் 29.8.18 அதிகாலை தர்ஹா வந்தடையும் வரை வாண வேடிக்கைகள் வர்ண ஜாலம் காட்ட உள்ளன. 07.9.2018 (வெள்ளி கிழமை) மாலை கொடியிறக்கத்துடன் சந்தனக் கூடு விழா நிறைவடைகிறது. பெரிய பட்டினம் சந்தனக் கூடு விழா கமிட்டியார்கள், சுல்த்தானியா சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
You must be logged in to post a comment.