Home செய்திகள் இரயில் போக்குவரத்தில் மாற்றம்-தென்னக இரயில்வே அறிவிப்பு

இரயில் போக்குவரத்தில் மாற்றம்-தென்னக இரயில்வே அறிவிப்பு

by mohan

இரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தற்போது நடப்பில் உள்ள ஆகஸ்ட் மாதத்தில் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் இரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து தென்னக இரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:

வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் -பாலக்காடு பயணிகள் ரயில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தவிர 02.8.2019 முதல் 31.8.2019 வரை திண்டுக்கல் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை-திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட வண்டி எண் 56770 மதுரையிலிருந்து 145 நிமிடங்களில் காலதாமதமாக மாலை 06.45 மணிக்கு புறப்படுகிறது.

வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் – கோயம்புத்தூர் -நாகர்கோவில் பயணிகள் ரயில் வியாழக்கிழமைகள் தவிர 19.8.2019 முதல் 26.8.2019 வரை திண்டுக்கல் -திருநெல்வேலி இரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.

மேலும் இந்த இரயில் வியாழக்கிழமைகள் தவிர 02.8.2019 முதல் 18.8.2019 வரை மற்றும் 27.8.2019 முதல் 31.8.2019 வரையும் திண்டுக்கல் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு இரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!