இரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தற்போது நடப்பில் உள்ள ஆகஸ்ட் மாதத்தில் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் இரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து தென்னக இரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:
வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் -பாலக்காடு பயணிகள் ரயில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தவிர 02.8.2019 முதல் 31.8.2019 வரை திண்டுக்கல் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை-திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட வண்டி எண் 56770 மதுரையிலிருந்து 145 நிமிடங்களில் காலதாமதமாக மாலை 06.45 மணிக்கு புறப்படுகிறது.
வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் – கோயம்புத்தூர் -நாகர்கோவில் பயணிகள் ரயில் வியாழக்கிழமைகள் தவிர 19.8.2019 முதல் 26.8.2019 வரை திண்டுக்கல் -திருநெல்வேலி இரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.
மேலும் இந்த இரயில் வியாழக்கிழமைகள் தவிர 02.8.2019 முதல் 18.8.2019 வரை மற்றும் 27.8.2019 முதல் 31.8.2019 வரையும் திண்டுக்கல் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு இரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.