Home செய்திகள் தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்குகிளை சார்பில் பெண்கள் மதரசா பட்டமளிப்பு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா..

தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்குகிளை சார்பில் பெண்கள் மதரசா பட்டமளிப்பு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா..

by ஆசிரியர்

தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்குகிளை சார்பில் 3.5.2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 இஸ்லாமியா பள்ளி விளையாட்டு திடலில்(கிஷ்கிந்தா) அத்தஸ்னீம் பெண்கள் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் A.முஹம்மது அய்யூப்கான் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் செ.ஆ முஹம்மது ஒலி, மாநில பேச்சாளர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

தீர்மானங்களை மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான் வாசித்தார். நிகழ்ச்சியின் நடுவே அத்தஸ்னீம் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அத்துடன் TNTJ பேச்சாளர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிப்பு செய்தார். இறுதியாக கிளைத்தலைவர் பதுருஜமான்  நன்றியுரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர் இதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 9.30 மணிவரை இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

இப்பொதுக்கூட்டத்தில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்தும்,  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடைகளை நீக்க கோரியும்,  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள சமூக விரோதிகள் நடமாட்டத்தை ஒடுக்கவும்,  கீழக்கரைக்கு புதிய நிரந்தர ஆணையர், கஞ்சா உட்பட போதை பொருட்களை தடை செய்தல், கீழக்கரையில் இரவு காலங்களில் அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல் போன்றவை தீர்மானமாக பொது கூட்டத்தில்  வாசிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!