கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு NASA−வின் கீழ் இயங்கி வரும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் 2018-19ம் கல்வியாண்டின் நிறைவு விழா மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பின் நிறைவு விழா 3/5/19 அன்று இஷா தொழுகைக்குப்பின் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஹிப்ளு வகுப்பில் படிக்கும் மாணவன் முஹம்மது பஹீது கிராஆத் ஒதி விழாவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மதரஸாவின் முதல்வர் அஹமது ஹுசைன் ஆசிஃப் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும், மதரஸாவின் ஆசிரியர் செய்யது முஹம்மது ஜமாலி மதரஸாவின் கடந்த காலத்தில் படிப்பை பற்றியும், ரமலானை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார்கள்.
கோடைகால பயிற்சி வகுப்பின் போது அல்குர்ஆனில் உள்ள 55-வது அத்தியாயமான ஸுரத்துர் ரஹ்மானை முழுமையாக மனனம் செய்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டது.
மேலும், இனி வர இருக்கும் 2019−2020 கல்வியாண்டிற்கான விண்ணப்ப படிவங்கள் வருகின்ற மே10 முதல் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை 19/153, முதல் மாடி, வடக்குத்தெரு, கீழக்கரை என்ற முகவரியில் மதரஸா அலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
You must be logged in to post a comment.