
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (GROIP II – NON INTERVIEW) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய பெயர் மற்றும் முகவரியினை இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10.05.2017க்குள் பதிவு செய்யலாம்.
மேற்படி பதிவு செய்தவர்கள் 12.05.2017 முதல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 9043260689 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.