9
செங்கம் அருகே மழையில் வீடு இழந்தவருக்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உதவி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மழையில் வீடு இழந்தவருக்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நிவாரண உதவி வழங்கினார்.
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் ஊராட்சியைச் சேர்ந்த சந்த கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் கூரை வீடு கோடை மழையில் சேதமடைந்தது.
வீடு இழந்த சிவாவுக்கு செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரசின் மூலம் காங்கிரிட் வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் உடன் கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன் சென்றார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.