புதுப்பாளையம் ஒன்றியத்தில் நிவாரண பொருட்கள்-அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் ஒரவந்தவாடி பெரியேரி தொரப்பாடி முத்தனூர் ஆகிய கிராமங்ளைச் சேர்ந்த துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் காய்கறி முககவசம் கிருமி நாசினி ஆகிய நிவாரண பொருட்களை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பழனிராஜ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நைனாகண்ணு செங்கம் மகரிஷி பள்ளி தலைவர் மனோகரன் ஆலத்தூர் மூர்த்தி ஒப்பந்ததாரர் சுப்பிரமணி கும்பகோணம் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.