சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் சத்யா நகர் பகுதிகளில் வீடுகளின் முன்புறமாக வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள் தொடர்ந்து காணாமல் போவதாக காவல்துறையில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இதையடுத்து காவல் துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தது. இந்நிலையில் சிலிண்டர் காணாமல்போன வீடுகளின் முன்னால் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்ட நபரின் பெயர் அசோக் குமார் என்பதும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து சிலிண்டர்களை திருடும் அசோக்குமார் அவற்றை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு 2000 ரூபாய் வீதம் விற்பனை செய்து வந்ததையும் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அசோக்குமாரிடமிருந்து 17 சிலிண்டர்களையும் அவரது இருசக்கர வாகனத்தையும் காவல்துறை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.
You must be logged in to post a comment.