மேலகரம் பகுதியில் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் பஞ்சாயத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவர், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி கைது செய்யப்பட்டனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலகரம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வரும் புவனேஸ்வரி என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது 25.02.24 காலை 11.30 மணிக்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க நபர் தான் பஞ்சாயத்தில் இருந்து வந்திருப்பதாகவும், தங்களின் வீட்டில் தண்ணீர் கனெக்சனில் மோட்டார் வைத்திருப்பதால் அதை அகற்ற வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தனது கணவர் இல்லை அவர் வந்தது பார்த்துக் கொள்ளலாம் என்று புவனேஸ்வரி கூறியதால் மீண்டும் மதியம் 03.00 மணியளவில் அதே நபர் அவருடன் 18 வயது மதிக்கத்தக்க நபரையும் அழைத்து வந்து மோட்டாரை அகற்ற வந்துள்ளோம் பிளேடு எடுத்து வாருங்கள் என்று கூறினார். புவனேஸ்வரி வீட்டிற்குள் சென்ற போது அவரின் பின்னே சென்ற இருவரும் புவனேஸ்வரியிடமிருந்து 32 கிராம் மதிப்புள்ள தங்க தாலிச் செயினை பறித்து ரூமில் தள்ளி பூட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
புவனேஸ்வரி செல்போன் மூலமாக எதிர் வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டு கதவை திறந்து வெளியே வந்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மேற்படி இருவரையும் விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதின் படி காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருட்டில ஈடுபட்ட சிந்தாமணி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து மாரி செல்வம் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவன் இளஞ்சிரார் நீதிகுழுமம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 32 கிராம் தங்க தாலிச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.