14
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று விடியற்காலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசி முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
பின்பு விடியற்காலை சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கோவிந்தா, கோவிந்த என்று பக்தி பரவசத்துடன் பெருமாளை பக்தர்கள் வணங்கினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்
You must be logged in to post a comment.