Home செய்திகள் கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் ஆசிரியர் தின விழா…

கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் ஆசிரியர் தின விழா…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் இ.ரஜபுதீன் தலைமை வகித்தார்.  கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பி. பாலகிருஷ்ணன் வரவேற்றார்.  திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.  அவர் பேசுகையில் “இயற்கை வேளாண் குறித்த கருத்துகளை மக்களிடம் மாணவ மாணவியர் கொண்டு செல்ல வேண்டும்.  இயற்கை வேளாண் முறையினால் மட்டுமே நமது மண் வளத்தை காப்பாற்றுவதோடு பசுமைப்பு ரட்சிக்கு உயிர் கொடுக்க முடியும் என வலியுறுத்தினார்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பணி புரிந்த சாவித்திரி புலே தாம் சார்ந்த பணியில் சமூகத்தில் எதிர்க்கப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்.  அவர் அத்துணை எதிர்ப்பையும் மீறி பெண் ஆசிரியையாக பணிபுரிந்து, பெண்களும் ஆசிரியையாக பணிபுரியலாம் என்பதற்கு ஒரு மூல காரணமாக விளங்கினார்.  ஆசிரியர் தின விழாவில் ஆசிரியை சாவித்திரி புலே நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்வோம்” என்றார். நாகர்கோவில் அரசு கலை கல்லூரி தமிழ்த்துறை பேராசியர் ரா. அமுதன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் நெல்சன் டேனியல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் என்.சுலைமான், வி.ராஜமாணிக்கம், ஜெ. எஸ்தர் கண்மணி  ஆகியோர் செய்திருந்தனர். முகம்பது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் எஸ்.எம்.யூசுப்  செயலர் எஸ்.எம்.எச். ஷர்மிளா ஆகியோர் வாழ்த்து கூறினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!