கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 29வது விளையாட்டு விழா இன்று (04-04-2017) மாலை 2.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருத்தினராக கேப்டன்.விஷால் ராய் ( INS Parundu, Commanding Officer, Uchipululi Camp) கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் கீழக்கரை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே.மகேஸ்வரி ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். கல்லூரித் தாளாளர் ரஹ்மத்நிஷா அப்துர்ரஹ்மான் கல்லூரிக் கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் உடற்பயிற்சி, யோகா, ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
பின்னர் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியை திவ்யா ஆண்டறிக்கையை வாசித்தார். அதைத் தொடர்ந்து போட்டிகளின் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொது மேலாளர் சேக் தாவுது கான் மற்றும் துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக கணிதத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி சங்கீதா நன்றியுரை வழங்கினார்.
You must be logged in to post a comment.