Home கல்வி கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி – ISICIS -17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்…

கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி – ISICIS -17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்…

by ஆசிரியர்

​தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக ‘கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி -ISICIS-17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று (05.09.2017) காலை 10.00 மணியளவில் இறைவணக்கத்துடன் தொடங்கியது.

முனைவர் ஏ.ஆர்.நாதிரா பானு கமால்இ கணினி அறிவியல் துறையின் தலைவர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமையுரையாற்றினார். பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸ்சன்ட் பல்கலைகழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் று.ஆயிஷா பானு கலந்து கொண்டு விழா சிறப்பு குறிப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன. அமர்வு தலைவர்-1. கே ஜரினா பேகம், பேராசிரியர், கணிணித்துறை, ஜஸான் பல்கலைக்கழகம், ஜஸான், சவுதி அரேபியா. அமர்வு தலைவர்-2. முனைவர் கே மகேஷ், உதவிப் பேராசிரியர், கணிணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. அமர்வு தலைவர்-3. எஸ் எம் அழகர்சாமி, உதவி ஆலோசகர், வுஊளுஇ கனடா அவர்கள் கலந்து கொண்டார்கள். அன்று மாலை நிறைவு விழா நடைபெற்றது. அதில் கல்லூரியின் தேர்வாணையரும்ää கணினி அறிவியல் துறையின் பேராசியரியருமான செல்வி.நா.கௌரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இளையான்குடிää டாக்டர் ஜாகிர் உசைன் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ. அப்பாஸ் மந்திரி அவர்கள் நிறைவு உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் இளங்கலை, முதுகலை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக கணினி துறையின் உதவிப்போராசிரியர் மா.மணிமேகலா நன்றியுரை வழங்க கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது.

இக்கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கணினித்துறையின் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும், மாணவர்களும் செய்து இருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!