11
இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பாக மகாகவி பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல வகையான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இந்நினைவு விழாவில் பல ஊர்களில் இருந்து பல பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் பங்கெடுத்த கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். பரிசுகளை வென்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.
You must be logged in to post a comment.