திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் என்றும் நினைவில் நிற்க கூடிய ஒரு அற்புத நிகழ்வாகும். அந்த அற்புத நிகழ்வை முதலில் சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது திருமண அழைப்பிதழ்கள்தான். இன்றைய நவீன உலகில் எத்தனையோ மின்மயம் வந்தாலும் அச்சு பத்திரிக்கையை கொடுத்து அழைப்பதில் உள்ள திருப்தி எதிலும் கிடைப்பதில்லை.
இந்த அடிப்படையான விசயத்தை கருத்தில் கொண்டு கீழக்கரையில் பல வருடங்களாக “சன்ரைஸ் ஸ்டூடியோ” நடத்தி வரும் பாலாஜி அனைவரும் விரும்பும் வகையில் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் “சன்ரைஸ் திருமண அழைப்பிதழ்” என்ற பெயரில் அனைத்து வகையான, புது வகைகள் நிறைந்த நிறுவனத்தை அச்சு வசதியுடன் தொடங்கியுள்ளார்.
இந்த புதிய நிறுவனம் இன்று (08/03/2020) டாக்டர்.ஃபஜிலா ஆசாத் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.