Home செய்திகள் திருவாடானை அருகே இளைஞர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை ..

திருவாடானை அருகே இளைஞர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீகாந்த் வயது 20. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று மணிகண்டி கிராமத்தின் அருகே வயல்வெளியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஸ்ரீகாந்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இறந்தவரின் தந்தை தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தகவல்:-  அபுபக்கர்சித்திக்

செய்தி தொகுப்பு.அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!