18
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் புதுக்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கோவிலூர் பகுதியில் தனியார் கட்டிடபணியை பூசாரிபட்டி சேர்ந்த சண்முகம் என்பவரிடம் செய்து வந்துள்ளார். இதில் பணி தாமதம் ஏற்பட்ட நிலையில் சண்முகம் எரியோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் விசாரணைக்கு பயந்து கோபாலகிருஷ்ணன் மன உளைச்சல் ஏற்பட்டு புதுக்கோட்டை பகுதியில் தனியார் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி: பக்ருதீன்
You must be logged in to post a comment.