Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் மின் வெட்டு இருளில் பரிதவித்த கர்ப்பிணிகள்..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் மின் வெட்டு இருளில் பரிதவித்த கர்ப்பிணிகள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், பிரசவ வார்டு, குழந்தைகள் நலம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்பட பல்வேறு பிரிவுகளில் 250க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதில் பிரசவ வார்டில் இன்று மாலை 4 மணியில் இருந்து மின்வெட்டு நீடித்தது. இருள் சூழ்ந்த வார்டில் கர்ப்பிணிகள் உதவிக்கு வந்த பெண்கள் அச்சமமடைந்தனர்.

இதனையடுத்து கர்ப்பிணிகளுக்கு உதவி வந்தவர்கள் இன்று (06/11/2020) இரவு 7:45 மணியளவில் சாலை மறியலுக்கு முயன்றனர். ராமநாதபுரம்- மதுரையில் திரண்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து கர்ப்பிணிகள் நிம்மதி அடைந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com