Home செய்திகள் பூலாங்குளம் ஊராட்சியில் சாலை வசதி செய்திட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

பூலாங்குளம் ஊராட்சியில் சாலை வசதி செய்திட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

by ஆசிரியர்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் ஊராட்சி, பாக்கியலட்சுமிபுரம், இங்குள்ள தெற்கு தெருவில் சில வருடங்களுக்கு முன் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சாலை போடுவதற்கு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை போடாமல் அள்ளிச் சென்றுவிட்டதாக ஊர்பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சாலைவசதி இல்லாததால் சாக்கடை கழிவுநீர் தெருவின் நடுவில் செல்கிறது,

இதனால் இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப் பணிகளை உடனே துவங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் பொதுநலன் கருதி M.ஞானசேவியர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்:1அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!