Home செய்திகள் புல்டோசர் அராஜகத்தை நிறுத்துங்கள்..! – தேசிய துணைத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.

புல்டோசர் அராஜகத்தை நிறுத்துங்கள்..! – தேசிய துணைத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.

by Askar

புல்டோசர் அராஜகத்தை நிறுத்துங்கள்..! – தேசிய துணைத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.

உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானியில் உள்ள ஒரு மதரஸாவையும், அதை ஒட்டியுள்ள மஸ்ஜிதையும் புல்டோசர் கொண்டு இடித்ததை கண்டித்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி, தங்கள் எஜமானர்களை மகிழ்விக்கும் அதீத உற்சாகமான அதிகாரத்துவ செயல்பாட்டின் விளைவே இதுவாகும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், “சமீபகாலமாக, பாசிஸ்டுகளால் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தின் சொத்துக்களை, சட்டவிரோதமாக புல்டோசர் செய்வது என்பது, நாட்டை ஆளும் பித்தலாட்ட சங்பரிவார பாசிஸ்டுகளால் சாதாரணமாக்கப்பட்டு விட்டது. மேலும் அரசாங்கங்களின் முழு ஆதரவுடன், அதிகாரவர்க்கத்தால் நடத்தப்படும் இந்தக் கொடுமையால், பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இதுபோன்ற தொடர் கேடுகெட்ட செயல்களும், செயல்களும் நாட்டை அராஜகத்துக்கு இட்டுச் செல்கின்றன.

ஹல்த்வானியில், அதிகார வர்க்கம் சட்டவிரோதம் என குறிப்பிடும் மதரசா கட்டிடத்தை அகற்றுவது மட்டுமல்ல அவர்களது நோக்கம், மாறாக பல தசாப்தங்களாக அவர்கள் வாழ்ந்து வரும் நிலத்தில் இருந்து 4000க்கும் மேற்பட்ட குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையும் அடங்கியதாகும். இக்கொடுமையில் பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்கம் போல் முஸ்லிம்கள் தான். மக்கள் வெளியேற்றத்திற்கு அதிகார வர்க்கம் தெரிவிக்கும் கதைகள் உண்மைத்தன்மை இல்லாத முரண்பாடுகள் நிறைந்ததாகும்.

2007-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ரயில்வே கூறியது என்னவென்றால், அவர்களின் 29 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 29 ஏக்கரில் 10 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 78 ஏக்கர் நிலத்தில் தூண்களைக் குறியிட்டு நிறுவியதாக 2016 ஆம் ஆண்டு அவர்களின் பதிப்பு இருந்தது. அதேவேளையில், அந்த நிலம் மாநில அரசு மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் மாநில அரசு அளித்த பிரமாணப்பத்திரத்தில் கூறியிருந்ததால், ரயில்வேக்கு கேள்விக்குரிய நிலத்தின் மீது உரிமை இல்லை. அதன் பின்னர், பாசிஸ்டுகள் கட்டமைக்கும் ‘தேசத்தின் எதிரிகளை’ வெளியேற்றுவதற்கு வசதியாக, மாநில அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி, சட்டவிரோத புல்டோசர் நடவடிக்கைக்கு துணை புரிந்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், வீடுகள், வணிகத் தளங்கள் மற்றும் மசூதிகள் மற்றும் கோவில்கள் போன்ற மத இடங்கள் உட்பட – முழுப் பகுதியும் நிரந்தரக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது.

அதிகாரிகளின் சட்டவிரோத செயலால் ஏற்கனவே 5 பெறுமதியான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு அப்பகுதியில் அமைதியின்மை நிலவுகிறது. நீதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினைக்கு வழிவகுக்கும், இது நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுக்கும்.

ஆகவே, அரசாங்கம் மற்றும் அதன் எந்திரத்தால் நாட்டின் குடிமக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறிவைக்கும் செயல்களை நிறுத்தவும், இதுபோன்ற இன மற்றும் பழிவாங்கும் செயல்களால் நாட்டை அராஜகத்திலிருந்து தடுக்கவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கோருகிறது.” என தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!