18
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உள்ளது என வனத்துறை இருக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்துள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்த மதுரை மாவட்ட மேலூர் வனவர் கம்பக் குடியான் தலைமையிலான வனத்துறையினர் கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் உள்ள சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கிளூவமலை காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் இறை தேடி ஊருக்குள் வந்து இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்டு மலைப்பாம்பை பிடித்த வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.