17
இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து சரக்கு வாகனத்தில் பீடி இலை கொண்டு வரப்படுவதாக மண்டபம் சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் அருகே வலையர்வாடி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பதிவு எண் இன்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பீடி இலை பண்டல்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் வேதாளை கடல் மார்க்கமாக படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக வேதாளை வடக்கு தெரு ரசீது 39, 2) தெற்கு தெருஅன்வர்தீன் 48 ஆகியோரை கைது செய்து, 300 கிலோ பீடி இலை மூடைகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
You must be logged in to post a comment.