Home செய்திகள் செங்கம் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பெண் பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு .

செங்கம் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பெண் பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு .

by mohan

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்களின் அறிவுரையின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தி வருகின்றனர்இதில் ஒரு பகுதியாக செங்கம் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பெண் பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செங்கம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் முன்பு திருவிழாக் காலம் என்பதால் அதிக அளவில் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவதை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசத்தை கட்டாயமாக அணிந்து ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருந்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை கலர் கோலமாவு மூலமாக வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் மேலும் தூய்மைப் பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது குறித்தும் நோய் தொற்று குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரமாக கலர் கோலமாவு மூலம் வரைந்த ஓவியத்தை திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளர் திருமதி அம்சா நேரில் பார்வையிட்டு செங்கம் பேரூராட்சிகள் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றார் இதில் செங்கம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!