Home செய்திகள் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் முருகேஷ் இம்முகாமில் அருணை மருத்துவக்கல்லூரி இயக்குனர்கள் எ. வ குமரன் , எ. வ கம்பன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ சு தி சரவணன் MLA பங்கேற்று சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் நலன் கருதி இம்முகாம் துவங்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் செவிலியர்களும் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்தனர் இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன் கலசப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அன்பரசிராஜசேகரன் , மாவட்ட கவுன்சிலர் மனோகரன் மற்றும் திமுக கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணி, இளங்கோவன் , ஆறுமுகம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com