திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூர் கிராமம், மந்தைவெளி பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார் .ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் தனஞ்ஜெயன் அனைவரையும் வரவேற்று பேசினார். வழக்கறிஞர் குமாரசாமி, எல்ஐசி முகவர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர்.முகாமிற்கு சிறப்பு விருந்தினராக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் கே.சரவணகுமரன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உத்தரவின்பேரில் மருத்துவர் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் மலைவாழ் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊராட்சிமன்ற தலைவர் கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் அனைவரும் தடுப்புசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேடம் ரீடு தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்டவர் மன அழுத்தம் மற்றும் சந்தேகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர் , வார்டு உறுப்பினர்கள் வனத்துறை ஜனார்த்தனன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், செவிலியர்கள் பூங்காவனம், பொன்னி, மருந்தாளர் வாஹித் , மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முகாம் பணியினை மேற்கொண்டனர்
You must be logged in to post a comment.