32
தென்னிந்திய சமூக பண்பாட்டுக் கழகத்தின் சேவா ரத்னா விருது பெற்ற திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிா்வாகிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலா் ப.குப்பனின் திருக்குறள் சேவையைப் பாராட்டி, சேவா ரத்னா என்ற விருதை தென்னிந்திய சமூக பண்பாட்டுக் கழகம் வழங்கியது. விருது பெற்ற ப.குப்பனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் பாராட்டினாா்.நிகழ்ச்சியில், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் விஜயன், செங்கம் கல்வியாளா் மாணிக்கம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக ஊழியா்கள், திருக்குறள் தொண்டு மைய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
You must be logged in to post a comment.