திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சையத் அஹ்மத் என்பவர் செங்கம் பகுதியில் இருந்து பக்கரிப்பாளையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நீப்பத்துறையிலிருந்து செங்கம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் இடது கால் முற்றிலும் உடைந்து விபத்துக்குள்ளானதுஇதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தமுமுக இலவச சேவை ஆம்புலன்சை அழைத்து விபத்துக்குள்ளான சையத் ஹகமதை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது சையத் அகமத் பரிதாபமாக உயிரிழந்தார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதனைத் தொடர்ந்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
28
You must be logged in to post a comment.