Home செய்திகள் நீட் தேர்வில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பாராட்டு

நீட் தேர்வில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பாராட்டு

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டம் 2019 -2020 கல்வி ஆண்டில் நீட் தேர்வில் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் எஸ்.அருள் செல்வம் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை எம்.உமாமகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.மாவட்ட கல்வி அலுவலர் செய்யார் திரு. பு. நடராஜன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நினைவு பரிசுகளை வழங்கினார் மேலும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெருமை சேர்த்த மூன்று மாணவிகள் ஒரு மாணவர் என நான்கு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார் தொடர்ந்து.முனைவர் ச. கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குனர் விழா பேருரை ஆற்றினார்.வி.குமார் மேல்நிலை கல்வி இணை இயக்குனர், சத்தியமூர்த்தி முதன்மை கல்வி அலுவலர் ராமநாதபுரம் , ஆறுமுகம் முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராகள். அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன், சி. துரை,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருகாவூர். எம். அரங்கநாதன், மாவட்ட துணை செயலாளர் டி. பி.துரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.ச.சங்கர் உதவி தலைமை ஆசிரியர் நன்றி உரையாற்றினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com