Home செய்திகள் கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி நகர் அலுவலகம் திறப்பு..

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி நகர் அலுவலகம் திறப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.17 –

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி நகர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நகர் தலைவர் செய்யது அபுதாஹீர் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் அஹமது ஜலீல், சுல்தான் சிக்கந்தர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் அப்துல் காதர் வரவேற்றார்.  மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் ஹமீது பைசர், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சோமு, பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் பேசினர். சமூக ஆர்வலர் அஜ்மீர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அக்பர், துணை தலைவர் மூர்த்தி, தொண்டரணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சுபைர் ஆபிதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் பொருளாளர் சாதிக் அலி நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com