முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நகர் பா.ஜ., சார்பில் ம மௌன ஊர்வலம் நடந்தது. இதில் நகர் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன் தொடங்கி வைத்தார். வாஜ்பாய் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., மாநில விவசாய அணி முருகவேல், மாநில பிரசார அணி நாகூர்பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் ராமசாமி, கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ஜின்னா, பா.ஜ., எஸ்.சி., அணி செயலாளர் ராஜவேல், வர்த்தக சங்கத் தலைவர் அபுபக்கர், பொருளாளர் முத்துச்செல்லம், ஊடகப்பிரிவு தலைவர் சண்முகநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், நகர் இளைஞரணி தலைவர் சக்திவேல், மகா சக்தி கேந்திர பொறுப்பாளர் செல்வகணபதி, நகர் துணைத்தலைவர் மாரிக்கண்ணன், ஊடகப்பிரிவு நகர் தலைவர் ரமேஷ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.