இராஜபாளையம் அடுத்துள்ள சாமிநாதபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் .ஊரடங்கும் காலத்திலும் 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்கின்ற மதுபானங்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.விருதுநகர் இராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமிநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரொரோனா தடுப்பூசி முகாமை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி துவக்கி வைத்தனர் .கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்து தடுப்பூசி முகாமை நடத்தி வருவதாகவும் தடுப்பூசியினால் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை மக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் கொரோைாவில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தடுப்பூசி அவசியம் என மக்களுக்கு எடுத்துரைத்து முகாம் நடத்தி வருகிறோம் .முகாமில் கலந்து கொண்ட பின்பு பேட்டியின் போது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் .எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் கொரோனா முடிந்தவுடன் நேரில் சென்று நன்றியை சொல்வதாகவும் மேலும் சாத்தூர் தொகுதியில் கொரோனா வில் இருந்து விடுபட தடுப்பூசி அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்கிறோம். குறிப்பாக புகையிலை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகையிலை போட்டு சாலைகளில் செல்லும் போது தூப்புவது மூலம் தொற்று உருவாகிறது மேலும் தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் இந்தப் பகுதியில் தங்குதடையின்றி மதுபானங்கள் 24 மணி நேரமும் கிடைப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார் இதை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.இதை தொடர்ந்து பேசிய துரை வையாபுரி கூறும்போது மக்களிடம் தடுப்பூசியின் விழிப்புணர்வு எடுத்துரைத்து வருகிறோம் கிராம பகுதியில் தற்போது வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனார் ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான தடுப்பு ஊசிகளை உடனடியாக கொடுக்க வேண்டும் மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சமின்றி தமிழக அரசு கேட்கின்ற தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.