மகுடஞ்சாவடி உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் கீழ், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் மூலிகை தோட்டம், உப்பு நீரில் மின்சாரம் தயாரித்தல், தீ எச்சரிக்கை அலாரம், பூகம்ப எச்சரிக்கை, விவசாயத்தின் முக்கியத்துவம், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை மாணவிகள் காட்சிக்கு வைத்திருந்தனர் இதனை சேலம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் விஜயராகவன், அரசு சாரா தொட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் இலங்கேஸ்வரன், மகுடஞ்சாவடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜாமணி, மேற்பார்வையாளர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டுக்களை தெரிவித்தனர்..
You must be logged in to post a comment.