13
இராமநாதபுரம், அக்.27- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கீழக்கரை முத்துசாமிபுரம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் , காலுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் எபென் பிரவீன் குமார் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜுலு, கீழக்கரை வட்டாட்சியர் பழனிக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பொருளாளர் சுப்ரமணியன், செல்வநாரயணன், சபீக், வழக்கறிஞர் நாதியா, திமுக அயலக அணி மாவட்ட தலைவர் முஹமது ஹனிபா, முன்னாள். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பத்தனர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.