கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ஹைரத்ததுல் ஜலாலியா மாணவ, மாணவியருக்கு நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளும் அடிப்படை வழியான கை கழுவும் முறைகள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் கிழக்குத் தெரு ஜமாத் பொருளாளர் Rtn.அப்துல் மத்தீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சி பற்றிய விளக்கத்தை கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் மாணவ, மாணவியர் மத்தியில் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவர் ஏ.அலாவுதீன் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் வட்டார மருத்துவ அலுவலரும், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவருமான டாக்டர்.ராசிக்தீன் மாணவ, மாணவிகளுக்கு கை கழுவும் முறை பற்றிய பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக ரோட்டரி சங்க செயலாளர் ஹசன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சிக்கான சோப்புக்களும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தர்மராஜா, நூஹு, சதக்கத்துல்லாஹ், ஆசரியர் மற்றும் ஆசிரியை பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.