இராஜபாளையம் அருகே பெண்ணிடம் பெப்பர் ஸ்பிரே அடித்து நூதன முறையில் நான்கரை பவுன் நகை திருட்டு மூன்று பேர் கைது இரண்டு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் இவரது மனைவி சிவசக்தி இவர் மகளிர் குழுவில் லோன் வாங்குவதற்காக வங்கிகளில் புதிய கணக்கு தொடங்கி கொடுப்பது மற்றும் பல பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் லோன் வாங்கி கொடுத்துள்ளார் இந்த நிலையில் சிவசக்தியை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் மற்றும் ராணி .முருகேஸ்வரி ஆகியோர் எங்களுக்கு வங்கியில் கடன் வாங்குவதற்கு புதிய கணக்கு தொடங்கி தர வேண்டுமென தொடர்பு கொண்டு உள்ளார். அதை அடுத்து இரவு 8 மணி அளவில் பொன்னகரம் பகுதிக்கு வந்த
சிவசக்தியை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதிக்கு செல்ல வேண்டுமென டாட்டா சுமோ காரில் அழைத்துச் சென்றுள்ளனர் அழைத்துச் செல்லும் பொழுது காரில் முன்புறம் அமர்ந்திருந்த அருப்புக்கோட்டை சார்ந்த சந்திரசேகர் மகன் கருத்தப்பாண்டி வயது 35 சுமார் பின்புற இறங்கி அமர்ந்து வண்டி சென்று கொண்டிருந்த பொழுது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி மயக்க நிலைக்கு கொண்டு சென்று ராணி கருத்தப்பாண்டி மற்றும் முருகேஸ்வரி ஆகியோர் சிவசக்தி அணிந்திருந்த நான்கரை பவுன் நகையை பறித்து அவரை சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு ஆய்வாளர் சார்லஸ் மற்றும் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர் இந்நிலையில் கருத்தப்பாண்டி. ராணி. முருகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய கவின்பாண்டி மற்றும் டிரைவர் பாண்டியராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர் படுத்தினர்.
.செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.