11
நேற்று (19/04/2019) நமது தளத்தில் பாதாள சாக்கடை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டு எல்லீஸ் நகர் சாலைமுத்து நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை மூடி காங்கிரட் கம்பி தெரியும் அளவிற்கு உடைந்து இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக நேற்று இரவோடு இரவாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த பாதாள சாக்கடை மூடியை அகற்றி விட்டு புதிய மூடியை பதித்துவிட்டு சிமெண்ட் வைத்து பூசி வைத்துள்ளார்கள்.
உரிய நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு இதை செய்தியாக வெளியிட்ட கிழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.