11
இராமநாதபுரம் அருகே கோப்பேரிமடம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (28). இன்று காலை இவர் குளிப்பதற்காக கோப்பேரிமடம் விலக்கில் உள்ள குளத்திற்கு செல்வதற்கு, இராமநாதபுரம் – தேவிபட்டினம் சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரின் உடல் / இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.