விருதுநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள காவலர்களுக்கு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இயந்திரங்கள் கொண்டு முறையாக கிருமிநாசினி அளிக்கப்பட வேண்டும்,, விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவியின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
இதன் மூலம் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பதை துரிதப்படுத்தப்பட வேண்டும், அதேபோல் கொரனோ தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு காவல்நிலையங்கள் மூடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு மருத்துவர்கள் அணிவது போல் பாதுகாப்பு உடை உபகரணங்கள் வழங்கப்பட, வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநிலக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.