Home செய்திகள் தேவிபட்டிணத்தில் கொள்ளயடிக்கப்பட்ட நகை… வழிப்பறி கொள்ளையரிடம்  42 பவுன் நகை மீட்பு.. 

தேவிபட்டிணத்தில் கொள்ளயடிக்கப்பட்ட நகை… வழிப்பறி கொள்ளையரிடம்  42 பவுன் நகை மீட்பு.. 

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பழனிவலசை கிராமத்தில் சாலை ஓரம் சென்ற பெண்ணிடம் 5 பேர் கொண்ட கும்பல் செயினை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திம்மம்பட்டி பாண்டித்துரை, பி.கொடிக்குளம் புலிக்கேசவன் ஆகியோர் ஹலோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காரில் தப்பிச்சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை தனது காரில் விரட்டிச் சென்ற புலிக்கேசவன், அவரது நண்பர் தேவிபட்டினம் வைரவகேசுக்கு தகவல் கொடுத்தார்.

துரிதமாக செயல்பட்ட வைரவகேசு நயினார்கோவில் சாலையில் டிராக்டரை நிறுத்தி காரில் தப்பி வந்த கொள்ளையர்களை பிடித்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசாரிடம் கொள்ளையர்களை ஒப்படைத்தனர். விசாரணையில் பரமக்குடி  ஏ.கச்சன் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சக்திவேல், சென்னை பெசன்ட் நகர் ஓலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வசந்த் என்ற செல்வக்குமார், சென்னை காமராஜர் நகர் 4வது தெரு முருகேசன் மகன் தினேஷ் ஆகியோர் என தெரிந்தது.

இவர்களை கைது செய்த போலீசார் அவர்களின் நணர்களான பரமக்குடி காடர்ந்தகுடி காலனி ரவி மகன் வினோத், குமரேசன் மகன் ராஜேஷ் பாண்டி ஆகியோரை கைது செய்தனர். இராமநாதபுரத்தில் 10 கொள்ளை, வழிப்பறி, சிவகங்கையில் ஒரு வழக்கில் தொடர்புடைய இவர்களிடமிருந்து நாற்பத்திரண்டு பவுன் நகையை மீட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!