Home செய்திகள் தங்கச்சிமடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

தங்கச்சிமடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

by mohan

இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் உயிரையும், உடமையையும், பாதுகாக்காத மத்திய, மாநில அரசுகளைசை கண்டித்துமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமேஸ்வரம் தாலுகா தங்கச்சிமடத்தில் நேற்று மாலை ( 28.01.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமேஸ்வரம் தாலுகா குழு உறுப்பினர் ஏ.ஆரோக்கிய நிர்மலா தலைமை வகித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் வி.காசிநாத துரை சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா, மாவட்ட குழு உறுப்பினர் இ.ஜஸ்டீன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஏ.அசோக், கே.மணிகண்டன், ஏ.ஜேம்ஸ்ஜஸ்டீன், ஏ.ஞானசேகர், டி.இராமச்சந்திர பாபு, வி.பழனிக்குமார், கே.கார்த்திக், கிளை செயலாளர்கள்எம்.முனியசாமி, எம்.பிரியா, எஸ்.சுப்பிரமணி, ஆர்.மணி கண்ணன், க.வெங்கடேஸ்வரி, மாணவர் சங்க நிர்வாகிஏ.அஞ்சனா, மாதர் சங்க நிர்வாகிகள் கே.சுமதி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் எம்.முத்துமாரி, எஸ்.சக்தி கனி, உலகம்மாள்,என்.பழனியம்மாள், ஜி.ராதா, உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com