பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க தலைவர் அன்பு மணி ராமதாஸின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது. சந்தை திடலில் அமைந்துள்ள கொடி மரத்தில் மாநில பொருளாளர் திலகபாமா கொடி ஏற்றி வைத்தார். பட்டிணம்காத்தான் துவக்க பள்ளி வளாகத்தில் மாநில பொருளாளர் திலகபாமா, மற்றும் மாநில மாணவர் சங்க செயலாளர் ஸ்ரீராம் ஐயர், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். கேணிக்கரையில் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் திலகபாமா, மற்றும் மாநில மாணவர் சங்க செயலாளர் ஸ்ரீராம் ஜயர், மாநில சிறுபான்மை அமைப்பு செயலாளர் ஷேக் முகைதீன் மற்றும் ஏராளமான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சிறுபான்மை பிரிவு செயலாளர் ராவுத்தர் கனி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெமீல் கான், கீழக்கரை நகர் செயலாளர் லோகு, மாநில துணை அமைப்புச் செயலாளர் ஹாஜி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் மகி, பரமக்குடி இளைஞரணி ஒன்றிய செயலாளர் திரு முருகன், மாவட்ட அமைப்பு செயலாளர் மேற்கு ராஜசேகர், ராமநாதபுரம் ஒன்றிய அமைப்புச் செயலாளர் தமிழ்மணி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சித்தார்கோட்டை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்
You must be logged in to post a comment.