18
மனிதநலன், மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் கொரானா பேரிடர் கால ஊரடங்கு உத்தரவினால் தொழில் முடக்கத்தால் வருவாய் இழந்த ஏழை,எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மனித நலன், மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு டாக்டர் ஏ.ஜோசப் அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் இன்பன்ட் ஜீஸஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர்- முதல்வர் ரெய்மண்ட் முன்னிலையில் மாநில இணைச்செயலர் ஐ.பன்னீர்செல்வம் நிவாரணப் பொருட்களை உதவிகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் விசுவாச டேவிட் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.