10
இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டமோ மற்ற தண்ணீருக்கான ஆதாரமோ இல்லாத சூழ்நிலையில் பல்வேறு தரப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும் இரண்டு ஆண்டு காலமாக தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த மக்கள் நவாஸ்கனி எம்பி., யிடம் கோரிக்கை வைத்தனர். நவாஸ்கனி எம்பி முயற்சியால் தற்போது தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகம் செய்யக்கூடிய ஏற்பாட்டை நவாஸ்கனி எம்பி, அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
You must be logged in to post a comment.