மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களுடைய பகுதி தேவைகளை கோரிக்கையாக எடுத்துரைத்தனர். அதில் கிடாரங்கொண்டான் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ் கூறுகையில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பெயர்களை ஊராட்சி மக்களுக்கு தெரியும் வகையில் எழுதவேண்டும். புஞ்சை பகுதிகளில் உள்ள அய்யனார் கோவிலிருந்து சுடுகாடு வரை தார்சாலை அமைக்கவேண்டும் வளத்தான்பட்டினம் காலனிரோடு, சந்திரகுளம் முதல் சுடுகாடு வரை தார்சாலை அமைக்கவேண்டும். புஞ்சை பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் வரும் பைப்புகளை புதிதாக மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து மருதூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி கூறுகையில் மருதூர் தாமரை குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மருதூர் பகுதியில் குடிநீர் காவி நிறமாக வருவதால் உடனடியாக சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். என்று கோரிக்கை விடுத்தார். மேலும் கொரோனா காரணமாக அரசு கட்டுபாட்டிற்கு இனங்க அதிக நேரம் கூட்டம் நடைபெற முடியாத சூழ்நிலை இருப்பதால் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேட்டுக்கொண்டதால் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக ஒன்றிய பெருந்தலைவரிடம் வழங்கினர் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகளை துரிதமாக செய்து கொடுப்பதாக உறுதியளித்து நன்றி கூறினார்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.