Home செய்திகள் மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மேலும் இருவருக்கு கொரானா தொற்று

மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மேலும் இருவருக்கு கொரானா தொற்று

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த இளம் வீரருக்கு கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 5 ம் தேதி ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமிற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவருடன் அறையில் தங்கியுள்ள மற்ற 7 பேருக்கு நேற்று பரிசோதனை செய்ததில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் மொத்தம் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்Uட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய படை வீரர்கள் 12 பேருக்கு நடைபெற்ற கொரான பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்களுக்கு இதுவரை கொரான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்a

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!