இராமநாதபுரம் நகராட்சியில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு துறை களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு புரதச்சத்து மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வழங்கினார். அவர் கூறுகையில் : இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,518 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 1,417 பேருக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 86 பேரின் பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது.மாவட்டத்தில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் 15 பேரில், சிறப்பான சிகிச்சையால் 7 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 8 பேருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு, அவர்கள் உடல் நிலை சீராக உள்ளது. மாவட்டத்தில் பதிவு பெற்ற அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என 9,338 பேருக்கு உதவித் தொகை தலா ரூ.1,000 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 15 அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுபெற்ற 18,634 தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. கொரானா பரவல் தடுப்பு களப்பணியாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க், புரதச்சத்து மாத்திரைகள் , கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தடை உத்தரவு மீறல் தொடர்பாக 2,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத 225 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார். தவழும் மாற்றுத்திறனாளிகள் 129 பேருக்கு கை, கால் உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களின் தொகுப்பு, நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் 129 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வழங்கினார்.இராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் சி.அஜித் பிரபுகுமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜெ.ராஜகுரு, வட்டாட்சியர் முருகவேல்,நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
12
You must be logged in to post a comment.