12
இராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணி பாஜக., சார்பில் நடந்தது. ராமநாதபுரம் டி -பிளாக் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு மாவட்ட தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர்கள் ஜெ.குமார், பி.குமார், சுந்தர முருகன், பொருளாளர் கணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் திருமலைச்சாமி.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மகளிரணி மாநிலத் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.பிரசார அணி மாவட்ட பொதுச் செயலர் அழகர்,மாவட்ட துணை தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயலர்கள் ராமசாமி, மணிமாறன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர் .ராமேஸ்வரம் நகர் ராமநாதன், மண்டபம் ஒன்றிய கிழக்கு தலைவர் சங்கரி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.