ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தனது ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு நதிநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரங்கள் வளர்ப்பு என பல்வேறு விழிப்புணர்வை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டு வருகிறார்.டிசம்பர் 13ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவர் இன்று மதுரை வந்தபோது வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பாக மதுரை சிம்மக்கல் பகுதியில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் வாழ்த்திப் பேசி பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.வரவேற்பை ஏற்றுக்கொண்டு பேசிய சாதனையாளர் மணிகண்டன் மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பு எனது வலிகளை மறக்க வைத்து உத்வேகத்துடன் இலக்கை அடைய பலம் அளிப்பதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் நேதாஜி தேசிய இயக்க தலைவர் சுவாமிநாதன், ஹைக்கூ கவிஞர் இரா.ரவி, நம்ம மதுரை ஸ்ரீதரன், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் அபுபக்கர், மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.